Sunday, May 26, 2019


சைவ, வைணவ, துவைத புத்தகங்கள் - Saiva vainava thuvaitha Books

  


நூல் குறிப்பு:

சைவ சமயத்தின் பழைய வரலாறுகள் நன்கு அறியப்படாமையால் அவை பழங்கதை வடிவில் இருந்து வருகின்றன.

சிவ வழிபாடு இந்திய நாட்டில் காணப்படுவது போலவே இந்திய நாடல்லாத பிற நாடுகளிலுமிருந்ததென்பது அண்மை வரையில் அறியப்படவில்லை. மேல் நாட்டினரின் தொல் பொருள் ஆராய்ச்சிகளால் பாம்பு வணக்கம், இலிங்க வணக்கம், சிவ வணக்கம், காளி வணக்கம் என்பன பிற நாடு களுக்கும் உரியனவாயிருந்தனவென்பதை அறிகின்றோம்.

இதற்கு ஆதாரமாகக் கிடைத்துள்ள சான்றுகளையும், சாங்கியம், யோகம், பூர்வமீமாம்சை, உத்தரமீமாம்சை, வைசேடிகம், வேதாந்தம், சைவசித்தாந்தம் முதலிய தத்துவ ஞானங்களின் வரலாறுகளையும் இங்கு சுருக்கமாகக் கூறியுள்ளோம்.

இந்நூல் புராணமுறையில் இருந்து வரும் சமயவரலாற்றுக்குப் பல வகையில் விளக்க மளிப்பதாக இருக்கும்.


நூல் குறிப்பு: 2

ஸ்ரீ வைஷ்ணவம் என்பது ஏதோ ஒரு இனத்தாருக்கு மாத்திரமே உரியதாக எண்ணப்படுகிறது. அது அப்படியில்லை. எல்லோருமே ஸ்ரீ வைஷ்ணவனாகப் பிறப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் இவ்வுலகில் பிறந்த அத்தனை ஜீவன்களும் ஸ்ரீ வைஷ்ணவன் ஆகலாம் என சிவப்புக் கம்பளம் விரிக்கும் மதம் ஸ்ரீ வைஷ்ணவம்.

வேதகாலத்தில் இருந்து வைஷ்ணவம் தோன்றியது. தமிழ் இலக்கியங்கள் அதனைப் போற்றியது, வாழ்க்கையோடு வைஷ்ணவம் எப்படியெல்லாம் கலந்துள்ளது என்பது தொடங்கி, அதன் தத்துவங்கள், சித்தாந்தங்கள், பெருமாளின் கல்யாண குணங்கள், சரணாகதி தத்துவம், வடகலை தென்கலை வித்தியாசங்கள் ராமானுஜர் ஏற்படுத்திய மாற்றங்கள் என சகலமும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.

கூடவே வைஷ்ணவத்தை முன்னெடுத்துச் சென்ற ஆழ்வார்கள், அவர்களுக்குப் பின் வைணவத்தை வளர்த்த ஆச்சாரியார்களைப் பற்றியும் சிலிர்ப்பூட்டும் நடையில் அழகு தமிழில் எழுதியுள்ள இந்நூலாசிரியர் கல்பாக்கம் அணுவாற்றல் மருத்துவமனையில் பணியாற்றுபவர். பக்தி இலக்கியம் தவிர குழந்தை இலக்கியத்திலும் பல பரிசுகளைப் பெற்றவர். பிரமிப்பூட்டும் தகவல்கள் கொண்ட இந்த ஸ்ரீ வைஷ்ணவம் உங்களை வசப்படுத்துவது நிச்சயம்.


நூல் குறிப்பு: 3

மாத்வ சமூகம் இந்து மதத்தில் ஒரு சிறுபான்மைச் சமூகம். அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் வசிக்கும் மாத்வர்கள் (குறிப்பாக கன்னட மற்றும் சமஸ்கிருத மொழியில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்) பலரும் தாங்கள் பின்பற்றும் சித்தாந்தத்தைப்பற்றி தெளிவாக அறியாதவர்களாக, ஆனால் அறிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆவல் நிரம்பப் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

இதுவரை கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ள பல புத்தகங்கள் துவைத சித்தாந்தத்தை மிகவும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளன. ஆனால், ‘துவைதம்’ குறித்த விரிவான விளக்கங்களுடன் தமிழ் மொழியில் புத்தகம் ஏதும் வந்ததாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் வாழும் சாதாரணமான பாமர மாத்வர்களும் மேற்படி விஷயத்தைத் தெள்ளத் தெளிவாக தெரிந்துகொள்வதற்காக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

மாபெரும் சமுத்திரமான துவைதத்தின் சித்தாந்தக் கருத்துகளை எளிதாக சுருக்கமாக எடுத்துச் சொல்வதுடன், துவைத சித்தாந்தம் என்பது என்ன? துவைதம் உருவானதற்கான காரணங்கள் என்னென்ன? அத்வைத, விசிஷ்டாத்வைத சித்தாந்தங்கள் என்ன சொல்கின்றன என்பது பற்றியெல்லாம் விவரிக்கும் இந்நூல் கூடவே துவைதத்தை நிறுவிய மகான் மத்வாச்சாரியார் வரலாறுடன், அவருக்குப் பின் வந்த மத்வ மகா புருஷர்களது சிறப்பையும் விளக்கிக் கூறுகிறது.

மாத்வத்தை அறிந்துகொள்ள விரும்புவோருக்கு இந்த நூல் ஒரு சிறிய திறவுகோலாக அமையும் என்பது நிச்சயம்.

வேதங்கள் தமிழில்...


எம்.ஜி.ஆர், கலைஞர் - MGR, Kalainjar




நூல் குறிப்பு:

1967-ஜனவரிக்கு முன்பிருந்தே எம்.ஆர். ராதா எம்.ஜி.ஆர் பனிப்போர் தொடங்கி விட்டதாகச் செய்திகள் வந்துகொண்டிருந்தது. 1967 ஜனவரி 12-ம் தேதி வியாழக்கிழமை மாலை சுமார் ஆறு மணிக்கு, ‘எம்.ஜி.ஆரை எம்.ஆர் ராதா சுட்டு விட்டார்’ என்ற செய்தி, காட்டுத் தீயாகச் சென்னை நகரில் பரவி, தமிழகமெங்கும் எதிரொலித்தது. பல இடங்களில் கலவரம், பஸ் மறியல், எரிப்புச் செய்திகள்.

அடுத்த நாள் காலை, ‘எம்.ஜி.ஆரைச் சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக் கொள்ள முயன்றார் ராதா; இருவரும் மருத்துமனையில் அனுமதி; இருவர் உயிருக்கும் ஆபத்தில்லை என்ற பத்திரிகைச் செய்திகள்தான் அமைதியைக் கொண்டு வந்தன.

நீதிமன்றத்தின் இந்த வழக்கு நடை பெற்ற போது நடந்த குறுக்கு விசாரணைகள் மட்டுமே பத்திரிகைளில் வந்தன. ஆனால் நீதிமன்றங்கள் கொடுத்த தீர்ப்பின் முழு விவரங்கள் வெளிவரவே இல்லை. அந்தத் தீர்ப்புகளில் பல உண்மைகள் பதிவாகி உள்னை. இரு பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட கொலை முயற்சி வழக்கு மட்டுமல்ல. ஆதாரப்பூர்வமான சரித்திரக் குறிப்பு இது.

1958 ல் பிறந்த ரங்கராஜன், குமுதத்தில் எழுத ஆரம்பித்து சுதாங்கன் ஆனபோது வயது 23, தமிழின் முக்கியமான பத்திகையாளர்களுள் ஒருவராக அறியப்படும் சுதாங்கள், சிறந்த கிராமப்புற ரிப்போர்ட்டிங்குக்காக 1986ல் பொருமைக்குரிய ‘ஸ்டேட்ஸ்மன்’ விருது பெற்றவர். இவர், தினமணியின் பொறுப்பாசிரியராக இருந்த காலத்தில், தினமணி கதிரில் எழுதிய தொடர் இது. ‘தேதி இல்லாத டைரி’(கட்டுரைகள்), ‘சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்(நாவல்) ஆகியவை சுதாங்கனின் முந்தைய நூல்கள்.

ஜெயலலிதா - Jeyalalitha

  


நூல் குறிப்பு: 1

ஏற்பவர்கள் மட்டுமல்ல நிராகரிப்பவர்களும்கூட, ஜெயலலிதாவின் மரணத்தை ஒரு சகாப்தத்தின் முடிவு என்றே இன்று அழைக்கிறார்கள்.

எப்படி எம்.ஜி.ஆரை நீக்கிவிட்டுத் தமிழக அரசியல் சரித்திரம் பேசமுடியாதோ, அப்படித்தான் ஜெயலலிதாவை விலக்கிவிட்டும் முடியாது.

ஒரு நடிகையாகத் தமிழக மக்களுக்கு அறிமுகமாகி, எம்.ஜி.ஆருக்குப் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் கட்சியை அதன் சிதைவிலிருந்து மீட்டுக் காப்பாற்றிக் கரையேற்றியவர்.

ஏராளமான ஊழல் வழக்குகள், கோர்ட் படியேறல்கள், தேர்தல் தோல்விகள், அடியோடு வீழ்ச்சி என்று காலம் அவரை எத்தனை அசைத்துப் பார்த்தாலும் அசையாத இரும்புப் பெண்மணி. அவரது உடன்பிறவா சகோதரி பற்றி, அவர்மூலம் வந்து சேர்ந்த உறவுகள் பற்றி, உலகம் வியந்த அவரது வளர்ப்பு மகன் திருமணம் பற்றி, அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட நகைகள், புடைவைகள், செருப்புகள் பற்றிக்கூட கோடி கதைகள் சொல்லவும் கேட்கவும் எப்போதும் ஆள்களுண்டு தமிழகத்தில்.

தமிழ்த் திரைவானில் கோலோச்சிய நாள் முதல் தமிழக அரசியலின் தவிர்க்கமுடியாத சக்தியாக உயர்ந்தது வரையிலான ஜெயலலிதாவின் சர்ச்சைக்குரிய வாழ்க்கை முழுவதுமாக இந்நூலில் பதிவாகியிருக்கிறது.

மு. க. - ஜெ ராம்கி


மு. க. - ஜெ ராம்கி - Karunanithi. - Ramki




நூல் குறிப்பு:

மு.க. - இந்த இரண்டெழுத்துக்காரரைப் பற்றி எதைச் சொன்னாலும், இரண்டு ஆபத்து உண்டு.

ஒன்று - புத்தகம் முழுக்க ஜால்ரா அடிக்கிறாங்கப்பா!

இரண்டு - அம்மாகிட்ட பணம் வாங்கியிருப்பாங்க... போட்டுத்தாக்கறாங்க!

ஆனால் மூன்றாவதாக ஒரு முடிவெடுத்து விருப்பு வெறுப்பின்றி ஆழ்ந்து எழுதப்பட்டிருக்கிறது இந்நூல்.

இந்த நூலை எழுதியிருக்கும் இளைஞர் ஜெ. ராம்கி தமிழ்ப் பத்திரிகை வாசகர்களுக்கும் இணைய வாசகர்களுக்கும் நன்கு பரிச்சயமானவர். `ரஜினி : சப்தமா? சகாப்தமா?’ என்ற இவரது முந்தைய அணுகுண்டு இன்னும் தமிழ் வாசகர்களிடையே பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

வில்லுக்குளத்துப் பறவை


வில்லுக்குளத்துப் பறவை - Villukulathu Paravai

ராஜீவ்காந்தி ஈழத்திற்கு அனுப்பிய அமைதிப்படை ஈழத்தில் செய்த அட்டூழியங்களை ஆவணப்படுத்தி இரு புத்தகங்கள் வெளிவந்திருந்தன.

1. வில்லுக்குளத்து பறவை
2. அம்மாளைக் கும்பிடுறானுகள்




அம்மாளைக் கும்புடுறாங்கள்


அம்மாளைக் கும்புடுறாங்கள் - Ammalai Kummidurangal

ராஜீவ்காந்தி ஈழத்திற்கு அனுப்பிய அமைதிப்படை ஈழத்தில் செய்த அட்டூழியங்களை ஆவணப்படுத்தி இரு புத்தகங்கள் வெளிவந்திருந்தன.

1. வில்லுக்குளத்து பறவை
2. அம்மாளைக் கும்பிடுறானுகள்.





அனைவருக்கும் வணக்கம்...        ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட புத்தகங்கள் சில தற்போது இல்லை என வருகிறது என தெரியவருகிறது. தாங்கள் விரும்பும் பு...